ஈகுவடார் நாட்டில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் பானோஸ் நகரில் கனமழை பெய்தது.
அதனைத்தொடர்ந்து பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.