சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பழமைவாய்ந்த ராட்சத மரம் கனமழை காரணமாக முறிந்து விழுந்தது.
ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராட்சத அரச மரம் இருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சுமார் 2.30 மணியளவில் அரச மரம் முறிந்து விழுந்தது.
நிகழ்விடத்தில் ஆட்கள் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் அதிக கூடும் இடங்களில் உள்ள இதுபோன்ற வலுவிழந்த மரங்களை அதிகாரிகள் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.