நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் ஆறு போல் ஓடுகிறது. கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், திடீர் மழையால், மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைந்தனர்.