முதுகு மற்றும் கழுத்து தசைகளை வலுப்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் கண்பார்வையை மேம்படுத்த உதவும் உஸ்திராசனா அல்லது ஒட்டக நிலை குறித்த காணொலி பதிவை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தின் 10-வது பதிப்பிற்கு முன்னதாக பகிரப்பட்ட இந்த பதிவு ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டிலும் தோரணையைச் செய்வதற்கான படிகளையும் விரிவாகக் கூறுகிறது.
பிரதமரின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில்,
“உஸ்திராசனா முதுகு மற்றும் கழுத்தின் தசைகளை பலப்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தையும், மற்றும் கண்பார்வையையும் மேம்படுத்துகிறது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.