நெல்லையப்பர் கோயிலில் திருவிழா காலங்களில் பயன்படுத்துவதற்காக பிரத்யேக பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், பிரத்யேகமாக பாடல் ஒன்றினை உருவாக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து பள்ளி இசை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ஆனி தேர் பவனி என்ற பாடல் உருவாக்கப்பட்டது.
கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி குருமகா சன்னிதானம் பாடலை வெளியிட நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் அதனை பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து புதிதாக வெளியிடப்பட்ட பாடலை மாணவர்கள் பாடினர்.