நெல்லை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனரை கண்டித்து ஜூன் 20ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் பதவி வகித்து வரும் அனிதா, ஊராட்சி செயலாளர்களை பழிவாங்கும் நோக்கமாக இடமாறுதல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அனிதாவை கண்டித்து 20ம் தேதி பாளையங்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.