காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில் உள்ள அப்பள தயாரிப்பு தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் முஸ்தப்பா என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், தமது நண்பர் நலீம் கான் என்பவருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து சுமார் இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.