அசாமின் சில்சார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 20 மாத குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது அருந்தவும் வற்புறுத்திய சம்பவம் வேதனையும் அதிர்ச்சியை அளிக்கிறது.
சில்சாரின் செங்குரித்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த புகாரின் பேரில் சிறிது நேரத்தில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து குழந்தையை மீட்டு, தாயை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கூறுகையில்,
குழந்தையை புகைபிடிக்கவும் குடிக்கவும் வற்புறுத்திய தாய் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து தாயை தடுத்து நிறுத்தி குழந்தையை மீட்டனர்.
குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழந்தைகள் நலக் குழு (CWC) தாய் மற்றும் குழந்தையை தற்காலிக காவலில் எடுத்துள்ளது.
இது குறித்து தாயை நேர்காணல் செய்வது உட்பட ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படும். இது குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க உதவும் எனத் தெரிவித்தார்.