தமிழகத்தில் பாஜக அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.
வயநாட்டில் பிரியங்கா காந்தி களம் இறங்குவது எதிர்ப்பார்த்த ஒன்று தான் எனக்கூறிய அவர், தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்காது என குறிப்பிட்டார்.
மேலும், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, வந்தே பாரத் ரயில்களை இயக்குவது ரயில்வே துறை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
ரயில் விபத்துக்கள் தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட்ட அவர். ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று மத்திய ரயில்வே அமைச்சர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.