கிருஷ்ணகிரி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்த முஹம்மது பயாஸ் என்பவர் தனது மனைவி, மகன் முகம்மது ஷாகாப், மகள் ஆகியோருடன் காரில் பெங்களூர் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கினாயணப்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுவன் முகமது ஷாகப் நிகழ்விடத்திலியே உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.