அசாமில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
15 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.