ஆனித்திருவிழாவை ஒட்டி நெல்லையப்பர் திருக்கோயிலில் சுவாமியின் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆனித்திருவிழாவை ஒட்டி கடந்த 13-ம் தேதி கொடியேற்றப்பட்டது.
அன்றிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்பாளுக்கும் பட்டாடை அணிவித்து வெள்ளிசப்பரத்தில் எழுந்தருளினர்.
இதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாள் வீதியுலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.