கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது ஜெயந்தியை வழிமறித்த மர்ம நபர்கள் அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.