பிரிட்டன் அரசின் கடன் கடந்த மே மாத நிலவரப்படி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த 1961-ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிரிட்டனின் கடன் அளவு உச்சகட்டத்தை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
அந்த வகையில், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் 3.47 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த மே மாதத்தில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 99.8 சதவீதமாகும். இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 96.1 சதவீதமாக இருந்ததாக அந்நாட்டின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இதனால் பொதுத் தேர்தல் முடிந்து அடுத்து அமைய போகும் அரசு, கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.