வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தீவிர கள்ளச்சாராய சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக மாவட்ட முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில், ட்ரோன் கேமராக்கள் மூலமாக கண்காணித்து, கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
குறிப்பாக பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டார்.