இருநாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அவரை வரவேற்றார்.
தனது பணயத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்கும் ஷேக் ஹசீனா, இரு தரப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரையும் ஷேக் ஹசீனா சந்திக்கிறார்.