ஈரோட்டில் அடாவடியாக கந்துவட்டி வசூலில் ஈடுபட்டு வரும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாகர்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமியிடம், தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
இதுவரை 60 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய போதும், வீட்டு பத்திரத்தை தர மறுத்துவரும் முத்துராமசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் பிரபா புகார் மனு அளித்துள்ளார்.