கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என திருச்சியில் த.மா.கா விவசாய அணியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.
பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய அணி சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்கவேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.