நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், உணவைத் தேடி குடியிருப்புகள் அருகே உலா வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், தூனேரி கிராமத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை சர்வ சாதாரணமாக உலா வரும் காட்சி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.