கள்ளச்சாராய மரணங்கள் சமூகப் போராளிகள் கப்சிப்!
Sep 10, 2025, 11:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய மரணங்கள் சமூகப் போராளிகள் கப்சிப்!

Web Desk by Web Desk
Jun 21, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த காலங்களில், இந்துக்களுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், அடிக்கடி, பொங்கி எழுந்து குரல் கொடுத்த சமூகப் போராளிகளாக தம்மைக் காட்டிக் கொண்ட தமிழ்த் திரைப் பிரபலங்கள், இப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய மரணங்களுக்குக் குரல் கொடுக்காமல் மௌனம் காப்பது ஏன் ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த துயரச் சம்பவத்துக்குப் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கில் டாஸ்மாக் கடைகளை அரசே நடத்தி வரும் நிலையிலும், கள்ளச் சாராயமும் குடித்து மக்கள் உயிரிழக்கும் அவலமும் நடக்கிறதே என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.

ஒரே நேரத்தில், இத்தனை உயிர்கள் அநியாயமாக பலியாகியிருக்கும் நிலையில், ஒன்றிரண்டு திரைப் பிரபலங்கள் தவிர, மற்ற திரைப் பிரபலங்கள் யாருமே இது குறித்து எதுவுமே பேசாதது பலருக்கும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் கார்த்தி,

எப்போதுமே பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துக்களைப் பேசும் நடிகர் பிரகாஷ் ராஜ்,

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இந்து மதத்தைத் தரக் குறைவாக பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ்,

சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடங்கி மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சிக்கும் நடிகர் சித்தார்த், இந்தி தெரியாது போடா என டீ ஷர்ட் அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரெல்லாம் இப்போது எங்கே போனார்கள் ? என மக்கள் தேடுகின்றனர்.

அதே போன்று கடந்த காலங்களில் மதுவிலக்கு தொடர்பாக சமூக வளைதளங்களில் பாடல்களை வெளியிட்டு குரல் எழுப்பிய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கோவன் போன்றவர்கள் எங்கே? என்றும் கேட்டுள்ளனர்.

கடந்த காலங்களில், இந்த போலி சமூகப் போராளிகள் எந்தெந்த விஷயங்களில் என்னென்ன சொன்னார்கள் ? என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகவும் வைரலாகி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம், மதுவிலக்கு கோரிக்கை போராட்டம், என்று சினிமா வசனம் பேசுவது போல், கருத்துக்களை வெளியிட்டு பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த போலி சினிமா பிரபலங்கள், இப்போது மௌனமாக இருப்பது, அவர்களின் திமுக சார்பு நிலையைக் காட்டுகிறது என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

Tags: Counterfeit Deaths Social Militants Cupchip!
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாடத்திட்டத்தில் யோகா இடம்பெற வேண்டும்!- அண்ணாமலை

Next Post

உள்நாட்டு விமான சந்தை மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies