ஆண்டவர் குப்பம் முருகன் கோயில்!
Sep 10, 2025, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டவர் குப்பம் முருகன் கோயில்!

Web Desk by Web Desk
Jun 22, 2024, 05:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகருடன் விளையாடிய பாலகனாக, சூரனை சம்ஹாரம் செய்த இளைஞனாக, வள்ளியை மணமுடிக்க வந்த முதியவராக என இந்த மூன்று கோலங்களிலும் முருகப் பெருமான் காட்சி அளிக்கும் ஒரு அற்புத கோயில் சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. இக்கோயிலைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பொன்னேரி செல்லும் சாலையில் ஆண்டவர் குப்பம் ஊரில் இந்த கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், ஆண்டிக் கோலத்தில் முருகன் காட்சி தந்ததால் இத்தலம் ஆண்டவர் குப்பம் என்று அழைக்கப்படுகிறது.

தம்மை வணங்காமல் சென்று பிரம்மாவிடம் பிரணவத்தின் அர்த்தம் என்ன என்று கேள்வி கேட்ட முருகப் பெருமான், விடை தெரியாத பிரம்மனின் தலையில் குட்டியதாக வரலாறு. அப்போது நின்ற அதே அதிகார தோரணையோடு இந்த கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றான் என்று தல வரலாறு கூறுகிறது.

எனவே , இந்தக் கோயிலில், மூலவர் முருகனுக்கு நேர் எதிரே, பிரம்மா உருவமில்லாமல் இருக்கிறார். பிரம்மன் உருவத்துக்குப் பதில் தாமரை,கமண்டலம்,மற்றும் அட்சர மாலை மட்டுமே வைக்கப் பட்டுள்ளது.

கோபுரத்தை வணங்கிவிட்டு , கொடி மரம்,பலிபீடம் மயில் வாகனம்,கடந்து உள்ளே சென்றால், கருவறையில் கிழக்கு நோக்கி ஸ்ரீபால சுப்பிரமணியராக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான். தனது இடது திருக்கரத்தை இடையில் வைத்தபடி, அழகாக தோற்றமளிக்கும் இந்த முருகப் பெருமானின் அழகே இந்தக் கோயிலின் சிறப்பம்சம். அதிகாரத் தோரணையில் இருப்பதால் , இங்கே முருகன் அதிகார முருகன் என்று போற்றப்படுகிறார்.

அழகிய சிற்பங்களுடன் விளங்கும், 16 கால் மண்டபம் இருக்கும் இக்கோயிலில், விநாயகப் பெருமான், காசி விசுவநாதர்,காசி விசாலாட்சி,நடராஜர்,சண்டீசர் சன்னதிகள் இருக்கின்றன.

இந்தக்கோயிலில் , காலையில் பாலனாகவும் , நண்பகலில் இளைஞனாகவும், மாலையில் வயோதிகனாகவும் கொள்ளை அழகுடன் காட்சி அளிக்கிறார்.

ஐப்பசியில் மகா கந்தர் சஷ்டி திருவிழா,கார்த்திகையில் திருக்கார்த்திகை திருவிழா, சித்திரையில் பிரம்மோஸ்த்தவம், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றன.

அதிகாரத் தோரணையில் காட்சி அளிப்பதால், இந்த பால சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்தால் ,உயர்பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் பரணி நக்ஷத்திர நாளில் இரவில் இக்கோயிலில் வந்து தங்கி, மறுநாள் காலை, சுவாமியைத் வணங்கினால், வாழ்வில் சௌபாக்கியம் உண்டாகும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமான, இந்த ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மேன்மை அடைவோம்.

 

Tags: ஆண்டவர் குப்பம் முருகன் கோயில்!
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு விமான சந்தை மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Next Post

என்றும் விஜய்! – சினிமா TO அரசியல்!

Related News

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies