ஆண்டவர் குப்பம் முருகன் கோயில்!
Mar 15, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டவர் குப்பம் முருகன் கோயில்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 05:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகருடன் விளையாடிய பாலகனாக, சூரனை சம்ஹாரம் செய்த இளைஞனாக, வள்ளியை மணமுடிக்க வந்த முதியவராக என இந்த மூன்று கோலங்களிலும் முருகப் பெருமான் காட்சி அளிக்கும் ஒரு அற்புத கோயில் சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. இக்கோயிலைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பொன்னேரி செல்லும் சாலையில் ஆண்டவர் குப்பம் ஊரில் இந்த கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், ஆண்டிக் கோலத்தில் முருகன் காட்சி தந்ததால் இத்தலம் ஆண்டவர் குப்பம் என்று அழைக்கப்படுகிறது.

தம்மை வணங்காமல் சென்று பிரம்மாவிடம் பிரணவத்தின் அர்த்தம் என்ன என்று கேள்வி கேட்ட முருகப் பெருமான், விடை தெரியாத பிரம்மனின் தலையில் குட்டியதாக வரலாறு. அப்போது நின்ற அதே அதிகார தோரணையோடு இந்த கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றான் என்று தல வரலாறு கூறுகிறது.

எனவே , இந்தக் கோயிலில், மூலவர் முருகனுக்கு நேர் எதிரே, பிரம்மா உருவமில்லாமல் இருக்கிறார். பிரம்மன் உருவத்துக்குப் பதில் தாமரை,கமண்டலம்,மற்றும் அட்சர மாலை மட்டுமே வைக்கப் பட்டுள்ளது.

கோபுரத்தை வணங்கிவிட்டு , கொடி மரம்,பலிபீடம் மயில் வாகனம்,கடந்து உள்ளே சென்றால், கருவறையில் கிழக்கு நோக்கி ஸ்ரீபால சுப்பிரமணியராக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான். தனது இடது திருக்கரத்தை இடையில் வைத்தபடி, அழகாக தோற்றமளிக்கும் இந்த முருகப் பெருமானின் அழகே இந்தக் கோயிலின் சிறப்பம்சம். அதிகாரத் தோரணையில் இருப்பதால் , இங்கே முருகன் அதிகார முருகன் என்று போற்றப்படுகிறார்.

அழகிய சிற்பங்களுடன் விளங்கும், 16 கால் மண்டபம் இருக்கும் இக்கோயிலில், விநாயகப் பெருமான், காசி விசுவநாதர்,காசி விசாலாட்சி,நடராஜர்,சண்டீசர் சன்னதிகள் இருக்கின்றன.

இந்தக்கோயிலில் , காலையில் பாலனாகவும் , நண்பகலில் இளைஞனாகவும், மாலையில் வயோதிகனாகவும் கொள்ளை அழகுடன் காட்சி அளிக்கிறார்.

ஐப்பசியில் மகா கந்தர் சஷ்டி திருவிழா,கார்த்திகையில் திருக்கார்த்திகை திருவிழா, சித்திரையில் பிரம்மோஸ்த்தவம், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றன.

அதிகாரத் தோரணையில் காட்சி அளிப்பதால், இந்த பால சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்தால் ,உயர்பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் பரணி நக்ஷத்திர நாளில் இரவில் இக்கோயிலில் வந்து தங்கி, மறுநாள் காலை, சுவாமியைத் வணங்கினால், வாழ்வில் சௌபாக்கியம் உண்டாகும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமான, இந்த ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மேன்மை அடைவோம்.

 

Tags: ஆண்டவர் குப்பம் முருகன் கோயில்!
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு விமான சந்தை மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Next Post

என்றும் விஜய்! – சினிமா TO அரசியல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies