விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே விளைநிலங்களுக்குள் நுழையும் ஒற்றைக் காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அத்திகோயிலை சுற்றியுள்ள விளைநிலங்களை, ஒற்றைக் காட்டு யானை நுழைந்து மாமரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் தங்களுக்கு பெறும் நஷ்டம் ஏற்படுவதால், காட்டு யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.