தஞ்சை மாவட்டம், நீலத்தநல்லூரில் அடையாளம் தெரியாத நபரை வெட்டிக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றங்கரையோர வயலில் 32 வயது மதிக்கத்தக்க ஆண், கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.