ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஆவுடையார்பாறையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நந்தகுமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், நொய்யல் குறுக்குச்சாலை அருகே சென்று கொண்டிருந்ததார்.
அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் படுகயமடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புகாரின் பேரில் ஓட்டுநர் மகேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்தை பறிமுதல் செய்தனர்.