குலதெய்வ வழிபாடு தொடரபாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் பொய் செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் நாட்டையே அதிரச்சிக்குள்ளாக்கிய நிலையில், குல தெய்வ வழிபாட்டை தடைசெய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் வெளியானது.
இச்செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிராமக்கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தவறான செய்தியை பரப்பியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.