நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது சர்வாதிகாரம் கட்டவிழ்க்கப்பட்டு பொதுமக்கள் துயரத்தைச் சந்தித்தாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில், “அவசர நிலையின்போது, இந்திய ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்ட நபர்கள், ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பதற்காக போராடியவர்களை நசுக்கியதாக கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜனநாயகத்தை படுகொலை செய்து அதற்கு மீண்டும் மீண்டும் கேடு விளைவித்த எதிர்க்கட்சியினரின் நீண்டநெடிய வரலாற்றுக்கு அவசரநிலை மிகப்பெரிய உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், அவசர நிலை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம் என்றும், அதை ஒருபோதும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.