தேசிய தேர்வுகள் முகமையை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
நீட் சர்ச்சையை தொடர்ந்து, தேசிய தேர்வுகள் முகமையை மேம்படுத்த முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக்குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அப்போது, தேர்வு முறையை விரிவாக ஆராய்ந்து மேம்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.