வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் .என் ரவி பங்கேற்றார்.
சேர்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என் ரவி பங்கேற்றார். முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைதொடர்ந்து 43 ஆயிரத்து 735 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஜி. ஏ .ராமதாஸ், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.