இளநிலை நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில், நாட்டு மக்களிடம் தற்போது வரை காங்கிரஸ் வருத்தம் தெரிவிக்கவில்லை என ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார்.