மொபைல் ஏற்றுமதி சீனாவை அடித்து நொறுக்கிய இந்தியா!
Jul 28, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொபைல் ஏற்றுமதி சீனாவை அடித்து நொறுக்கிய இந்தியா!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொபைல் போன் ஏற்றுமதியில் , இந்தியா, வேகமாக முன்னேறி சாதனை படைத்து வருகிறது. சீனா மற்றும் வியட்நாம் நாடுகளின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை இந்தியா கைப்பற்றி இருக்கிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை PLI (பிஎல்ஐ) திட்டங்கள் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

2020ம் ஆண்டில் ஆத்ம நிர்பார் பாரத்-சுயசார்புடைய இந்தியா என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி உருவாக்கிய PRODUCTION LINKED INCENTIVES-PLI திட்டங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

14 துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை என்னும் PLI திட்டத்தினால் இந்திய மொபைல் உற்பத்தியும் ஏற்றுமதியும் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சர்வதேச வர்த்தக மையத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு, சீனா மற்றும் வியட்நாமில் இருந்து மொபைல் போன் ஏற்றுமதி முறையே 2.78 சதவீதம் மற்றும் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ​இந்தியாவின் ஏற்றுமதி 40.5 சதவீதம் உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மொத்தமாக 9.4 பில்லியன் டாலர் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், மொத்த சரிவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

PLI திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தி சாதனங்களைத் தயாரிக்கிறது. Foxconn, Pegatron மற்றும் Wistron ஆகிய தொழிற்சாலைகளில் ஆப்பிள் ஐபோன்களே உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால், இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி 14 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஐபோன் ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டாலராக கூடியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 15.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் 65 சதவீதம் ஐபோன் ஏற்றுமதியாக உள்ளது. இந்த ஆண்டு, ஐபோன் ஏற்றுமதி, 29 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபோன் ஏற்றுமதி, இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகும்.

இப்படி, சீனாவுக்கு பிறகு ஐபோன்களுக்கான இரண்டாவது உற்பத்தித் தளமாக இந்தியா உருவாகி உள்ளது. மேலும் சர்வதேச மொபைல் போன் சந்தையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் Huawei போன்ற சில சீன நிறுவனங்களின் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு தடை ஆகிய காரணங்களால், சீனாவின் மொபைல் ஏற்றுமதி வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

சீனாவின் உற்பத்தி சக்திக்கு இந்தியா மாற்றாக உருவெடுத்து வளர்வது, சீனாவுக்கு பெருங் கவலையை ஏற்படுத்தி உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags: India smashed China's mobile exports!
ShareTweetSendShare
Previous Post

கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!

Next Post

சென்னையில் நாளை நடைபெறுகிறது தமிழக பாஜக செயற்குழு கூட்டம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies