பழைய குற்றாலம் செல்லும் சாலை வன எல்லை தொடங்கும் பகுதியில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி வனத்துறை எல்லை உட்பட்ட காப்புக்காடு பகுதியில் உள்ளது. எனவே, பழைய குற்றால அருவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர், பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது குற்றாலம் செல்லும் சாலையில் வன எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் பழைய குற்றால அருவி விரைவில் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.