கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!
Mar 19, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடாரில் அசத்தல் ஒரே நாளில் உச்சம் தொட்ட இந்திய தேவதை!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் நடந்த இசைப் போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களை திகைக்க வைத்த 10 வயது சென்னை கிடாரிஸ்ட் மாயா நீலகண்டன் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றுவிட்டார். யார் இந்த மாயா நீலகண்டன் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த மகேந்திரா தனது எக்ஸ் தளத்தில், தேவதைகளின் தேசத்தில் இருந்து ஒரு ராக் இசை தேவதை என்று 10 வயது மாயா நீலகண்டனைப் பாராட்டி, பதிவு செய்திருந்தார் . இந்த பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்த நிலையில், சிறுமியின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நடக்கும் America’s Got Talent, நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சைமன் கோவல், ஹெய்டி க்ளம், சோபியா வெர்கரா மற்றும் ஹோவி மண்டேல் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

America’s Got Talent, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிடார் வாசித்து நடுவர்களை வியக்க வைத்த மாயா நீலகண்டன் கிடார் வாசித்து முடித்ததும் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

நான்கு நடுவர்களில் ஒருவரான சைமன் கோவல், தயங்கி தயங்கி கிடார் வாசிக்கத் தொடங்கிய மாயா பிறகு , ராக் இசை தேவதையாக மாறி விட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்திய பாரம்பரிய மாறாமல் காக்ரா உடையில், நெற்றியில் பொட்டுடன் இந்திய சிறுமியாகவே மாயா மேடையில் தோன்றியதும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

நடுவராக இருந்த நடிகை சோஃபியா, மாயா நீலகண்டனுக்கு 10 வயது தான் என்பதை நம்ப முடியவில்லை என்று தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திருந்தார்.

சென்னையைச் சேர்ந்த மாயா நீலகண்டன் , 5 வயது முதல் கிடார் இசை கற்க தொடங்கிய அவர் தனியாக ஒரு youtube சேனல் நடத்துகிறார்.

அமெரிக்காவின் பிரபல கிடார் இசைக் கலைஞர் Gary Wayne Holt தான் கையெழுத்திட்ட கிடாரை மாயா நீலகண்டனுக்கு பரிசளித்துளளார். அதை பெருமையாக கருதும் மாயா நீலகண்டன்,கிடார் இசையில் புதிய பரிமாணத்தை உருவாக்குவதே தனது இசைக் கனவு என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள மாயா நீலகண்டன், கர்நாடக இசை கலந்த மேற்கத்திய சங்கீதத்தை அளித்த தம்மை பலரும் பாராட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Tags: Indian angel who peaked in one day on guitar!
ShareTweetSendShare
Previous Post

உடல் எடை குறைப்பா? டிரெண்டிங் ஆகும் தண்ணீர் விரதம்!

Next Post

மொபைல் ஏற்றுமதி சீனாவை அடித்து நொறுக்கிய இந்தியா!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies