கரூரில், நீதிமன்ற நிகழ்வுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு செல்போனில் படம் பிடித்து அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நூறு கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு விவகாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில், முன்ஜாமீன் தொடர்பான விவாதங்கள் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை செல்போனில் வீடியோ காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் என்பவர் அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்ற எழுத்தாளர் வீரக்குமார் புகார் அளித்தார். அதன் பேரில், தமிழினையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.