ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே சேதமடைந்த கூட்டுக் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளம்பாளையம், நாதிபாளையம், நாகதேவம்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அத்தாணி சாலையில் நிலத்தடியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
இதுகுறித்து புகாரளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சாலை விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளதால் விரைந்து குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.