மலைப்பாங்கான பகுதியில் பயணிக்கும் இலகுரக பீரங்கியை வடிவமைக்கும் பணியில் லார்சன் அன்ட் டப்ரோ நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் சீனா அவ்வப்போது அத்துமீறுவதால், இந்திய ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில், நீரிலும் மலையிலும் செல்லக்கூடிய இலகுரக பீரங்கியை டிஆர்டிஓ என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள டி72 மற்றும் டி-90 பீரங்கிகளை விட இலகுவான இந்த பீரங்கி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை எளிதில் கடந்து செல்லக் கூடியது.
குஜராத்தின் ஹசிரா பகுதியில் இதன் சோதனை ஓட்டத்தைப் பார்வையிட்ட டிஆர்டிஓ தலைவர் காமத், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இலகுரக பீரங்கி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.