மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!
Aug 9, 2025, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!

பூரி கடற்கரையில் சிறிது நேரம் கழித்த குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Jul 8, 2024, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனித நகரமான பூரியின் வருடாந்திர ரத யாத்திரையில் நேற்று பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை கடற்கரையில் சிறிது நேரம் செலவிட்டார். பின்னர் அவர் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனுபவத்தைப் பற்றி தமது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது  எக்ஸ் தளத்தில்,

“வாழ்க்கையின் சாரத்துடன் நம்மை நெருக்கமாக  இணைக்கும்  இடங்கள் பல உள்ளன.  நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை அவை நினைவூட்டுகின்றன. மலைகளும், காடுகளும், ஆறுகளும், கடற்கரைகளும் நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை ஈர்க்கின்றன.

இன்று நான் கடற்கரையில் நடந்து செல்லும்போது, சுற்றுப்புறங்களுடன் ஒரு ஒற்றுமையை உணர்ந்தேன் – மென்மையான காற்று, அலைகளின் கர்ஜனை, மகத்தான நீர் விரிவு. அது ஒரு தியான அனுபவமாக அமைந்தது.

நேற்று மஹாபிரபு ஸ்ரீ ஜகந்நாதரை நான் தரிசனம் செய்தபோது நான் உணர்ந்த ஆழ்ந்த உள் அமைதியை அது எனக்கு அளித்தது. அத்தகைய அனுபவத்தைப் பெறுவது நான் மட்டுமல்ல; நம்மை விட மிகப் பெரிய, நம்மை தாங்கி நிற்கிற, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிற ஒன்றை நாம் எதிர்கொள்ளும்போது நாம் அனைவரும் அப்படித்தான் உணர முடியும்.

தினசரி வாழ்க்கையின் அவசர யுகத்தில், இயற்கை அன்னையுடனான இந்தத் தொடர்பை நாம் இழக்கிறோம். மனிதகுலம் இயற்கையை ஆக்கிரமித்து, தனது சொந்த குறுகிய கால நன்மைகளுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது. இதன் விளைவு அனைவரும் காண வேண்டிய ஒன்றாகும்.

இந்தக் கோடையில், இந்தியாவின் பல பகுதிகள் பயங்கரமான தொடர் வெப்ப அலைகளைச் சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. வரவிருக்கும் தசாப்தங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான பகுதி கடல்களால் சூழப்பட்டுள்ளது, மேலும் புவி வெப்பமயமாதல் உலகளாவிய கடல் மட்டங்களில் உயர்வுக்கு வழிவகுக்கிறது, கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும்  அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடல்களும், அங்கு காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவை பல்வேறு வகையான மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக, இயற்கையின் மடியில் வாழும் மக்கள் நமக்கு வழி காட்டக்கூடிய பாரம்பரியங்களை நிலைநிறுத்தியுள்ளனர். உதாரணமாக, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், காற்று, கடல் அலைகளின் மொழியை நன்கு அறிந்தவர்கள். நம் முன்னோர்களைப் பின்பற்றி கடலைக் கடவுளாக வழிபடுகின்றனர்.

சுற்றுச்சூழலின் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்; அவை அரசுகள், சர்வதேச அமைப்புகளிடமிருந்து வரக்கூடிய விரிவான நடவடிக்கைகள்,  குடிமக்களாக நாம் எடுக்கக்கூடிய சிறிய, உள்ளூர் நடவடிக்கைகள்  ஆகும். இரண்டும் ஒன்றையொன்று நிரப்புபவை. சிறந்த எதிர்காலத்திற்காக நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூரிலும்  செய்ய உறுதியேற்போம். நம் குழந்தைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” எனத தெரிவித்துள்ளார்.

Tags: beaches have a deep attraction in us: President!Mountainsforestsrivers
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் வெள்ளப் பெருக்கு- முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு!

Next Post

3-ம் கட்ட அகழாய்வு: சுடுமண்ணாலான பொருட்கள் கண்டெடுப்பு!

Related News

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies