மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!
Aug 13, 2026, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன: குடியரசுத் தலைவர்!

பூரி கடற்கரையில் சிறிது நேரம் கழித்த குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 02:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புனித நகரமான பூரியின் வருடாந்திர ரத யாத்திரையில் நேற்று பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை கடற்கரையில் சிறிது நேரம் செலவிட்டார். பின்னர் அவர் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனுபவத்தைப் பற்றி தமது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது  எக்ஸ் தளத்தில்,

“வாழ்க்கையின் சாரத்துடன் நம்மை நெருக்கமாக  இணைக்கும்  இடங்கள் பல உள்ளன.  நாம் இயற்கையின் ஒரு பகுதி என்பதை அவை நினைவூட்டுகின்றன. மலைகளும், காடுகளும், ஆறுகளும், கடற்கரைகளும் நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை ஈர்க்கின்றன.

இன்று நான் கடற்கரையில் நடந்து செல்லும்போது, சுற்றுப்புறங்களுடன் ஒரு ஒற்றுமையை உணர்ந்தேன் – மென்மையான காற்று, அலைகளின் கர்ஜனை, மகத்தான நீர் விரிவு. அது ஒரு தியான அனுபவமாக அமைந்தது.

நேற்று மஹாபிரபு ஸ்ரீ ஜகந்நாதரை நான் தரிசனம் செய்தபோது நான் உணர்ந்த ஆழ்ந்த உள் அமைதியை அது எனக்கு அளித்தது. அத்தகைய அனுபவத்தைப் பெறுவது நான் மட்டுமல்ல; நம்மை விட மிகப் பெரிய, நம்மை தாங்கி நிற்கிற, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிற ஒன்றை நாம் எதிர்கொள்ளும்போது நாம் அனைவரும் அப்படித்தான் உணர முடியும்.

தினசரி வாழ்க்கையின் அவசர யுகத்தில், இயற்கை அன்னையுடனான இந்தத் தொடர்பை நாம் இழக்கிறோம். மனிதகுலம் இயற்கையை ஆக்கிரமித்து, தனது சொந்த குறுகிய கால நன்மைகளுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது. இதன் விளைவு அனைவரும் காண வேண்டிய ஒன்றாகும்.

இந்தக் கோடையில், இந்தியாவின் பல பகுதிகள் பயங்கரமான தொடர் வெப்ப அலைகளைச் சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கிலும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. வரவிருக்கும் தசாப்தங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான பகுதி கடல்களால் சூழப்பட்டுள்ளது, மேலும் புவி வெப்பமயமாதல் உலகளாவிய கடல் மட்டங்களில் உயர்வுக்கு வழிவகுக்கிறது, கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும்  அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடல்களும், அங்கு காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவை பல்வேறு வகையான மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக, இயற்கையின் மடியில் வாழும் மக்கள் நமக்கு வழி காட்டக்கூடிய பாரம்பரியங்களை நிலைநிறுத்தியுள்ளனர். உதாரணமாக, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், காற்று, கடல் அலைகளின் மொழியை நன்கு அறிந்தவர்கள். நம் முன்னோர்களைப் பின்பற்றி கடலைக் கடவுளாக வழிபடுகின்றனர்.

சுற்றுச்சூழலின் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்; அவை அரசுகள், சர்வதேச அமைப்புகளிடமிருந்து வரக்கூடிய விரிவான நடவடிக்கைகள்,  குடிமக்களாக நாம் எடுக்கக்கூடிய சிறிய, உள்ளூர் நடவடிக்கைகள்  ஆகும். இரண்டும் ஒன்றையொன்று நிரப்புபவை. சிறந்த எதிர்காலத்திற்காக நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூரிலும்  செய்ய உறுதியேற்போம். நம் குழந்தைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” எனத தெரிவித்துள்ளார்.

Tags: Mountainsforestsriversbeaches have a deep attraction in us: President!
Share
Tweet
SendShare
Previous Post

பீகாரில் வெள்ளப் பெருக்கு- முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு!

Next Post

3-ம் கட்ட அகழாய்வு: சுடுமண்ணாலான பொருட்கள் கண்டெடுப்பு!

Related News

லார் கிப்பான் குரங்குடன் வீடியோ – நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு – 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலய கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 40 பேர் காயம்!

குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை தொடர்வது கவலையளிக்கிறது – நயினார் நாகேந்திரன்

உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி சுத்திகரிப்பு சடங்கு – உரிய விசாரணை நடத்தப்படும் என ஜெ.பி.நட்டா உறுதி!

பழனி தண்டாயுதபாணி கோயில் சொத்துக்கள் – அதிகாரிகள் நேரில் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் மருத்துவமனை அறை வாடகைக்கு கட்டுப்பாடு – நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்!

எதிர்கட்சிகள் கடும் அமளி – மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

வாளையாறு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை குட்டியுடன் உயிரிழப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies