சீனாவிற்கு சவால் ஜோராவர் இலகு ரக பீரங்கி தயாரித்து இந்தியா சாதனை!
Jul 1, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவிற்கு சவால் ஜோராவர் இலகு ரக பீரங்கி தயாரித்து இந்தியா சாதனை!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுக்கு எதிராக லடாக் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்கு துணை புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜோராவர் இலகு ரக பீரங்கி உற்பத்தி இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இரண்டு வருட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜோராவர், உள்நாட்டு இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சான்றாகும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஜோராவர் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகு ரக பீரங்கி ஆகும். லார்சன் & டூப்ரோ (L&T) உடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஜோராவர் பீரங்கியைத் தயாரித்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் ஜம்முவின் ராஜா குலாப் சிங்கின் கீழ் பணியாற்றிய இராணுவ ஜெனரல் ஜோராவர் சிங் சிங்கின் நினைவாக ஜோராவர் என பெயரிடப்பட்டுள்ளது. ஜோராவர் அதிகபட்சம் 25 டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

உயரமான மலை உச்சிகள் முதல் தீவுப் பகுதிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளில் துரிதமாக செயல்படும் வகையில் ஜோராவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் ஒருங்கிணைப்பு, அதிக அளவு சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் நீர்வீழ்ச்சி இயக்க திறன் போன்ற அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப் பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஹசிராவில், இந்திய இராணுவத்தின் நவீன இலகு ரக ஜோராவர் பீரங்கியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில், ஜோராவர் பீரங்கியில், வெடிமருந்துகள் பொருத்த பட்டு , அதன் செயல் திறன் சோதிக்கப்பட்டது. மேலும், ஜோராவர் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த டிஆர்டிஓ வின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத், குளிர்காலத்தில் பீரங்கியின் செயல்பாடுகள் மற்றும் அதிக உயரமான இடங்களில் சோதனைகள் என பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன என்று தெரிவித்தார்.

ஜோராவர் சோதனைகள் முழுவதுமாக முடிய இன்னும் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் , முதல் முழு சுழற்சியை முடித்து ராணுவத்தில் இணைப்பதற்கு சுமார் ஒராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். எனவே, ஜோராவர் 2027ம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முதற்கட்டமாக 59 பீரங்கிகள் இந்திய இராணுவத்தில் இணைக்கப் படும் என்றும், அடுத்த கட்டமாக, 295 கவச வாகனங்களின் முக்கிய திட்டத்திற்கு ஜோராவர் முன்னணியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் இருந்து முதல் வெடிமருந்துகளை கொள்முதல் செய்தாலும் , இப்போது உள்நாட்டிலேயே வெடிமருந்துகளை தயாரிக்க டிஆர்டிஓ முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

MADE IN INDIA திட்டத்தின் கீழ், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் இலகு ரக பீரங்கி ஜோராவர் ஆகும். இந்திய ராணுவ அறிக்கையின் படி, குறைந்தபட்சம் 354 ஜோராவர்களை வாங்க திட்டமிடப் பட்டுள்ளன.

தொடர்ந்து, அடுத்த கட்டமாக, 700 ஜோராவர்களை வாங்குவதற்கான வாய்ப்பு வலுவாக இருப்பதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவுக்குப் பதிலடி கொடுக்க உதவும் வகையில் ஜோராவர் உற்பத்தியில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே தயாரித்த 500-க்கும் மேற்பட்ட இலகு ரக பீரங்கிகள் உள்ள நிலையில், தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்கி வருகிறது சீனா.

குறிப்பாக லடாக், உத்தரகண்ட், தவாங் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மிகவும் உயரமான எல்லை பகுதிகளில் போர் ஏற்பட்டால், இருநாடுகளுக்கும் இந்த இலகு ரக பீரங்கிகள் மிகவும் பொருத்தமான இராணுவத் தளவாடமாக இருக்கும் என்று கூறப் படுகிறது.

இந்திய எல்லையில் சீனாவின் மோதலை எதிர்கொண்டு தடுக்கும் வகையில் இந்த ஜோராவர் உள்நாட்டிலேயே உருவாக்கி இருப்பது இந்தியாவின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Tags: Challenge to China by making Zoravar light artilleryIndia's record!
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.பாரதி நிச்சயம் சிறை செல்வார்! – அண்ணாமலை

Next Post

நூதன தண்டனை கொடுத்த தந்தை – கொதித்தெழுந்த இணையவாசிகள்!

Related News

டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது – நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

திருப்பூர் மாநகராட்சி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதுச்சேரி பாஜக தலைவராக வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு!

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த எதிரொலி – தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டட பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூரில் ரூ. 75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு வட்டாட்சியர் கைது

சேலத்தில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

சிங்கம்புணரி அருகே குவாரி மண் சரிவில் 6 பேர் பலியான வழக்கு – குவாரி உரிமையாளர், மேலாளருக்கு முன்ஜாமின்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies