ஏர் கேரளா விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.வளைகுடா நாடுகளுக்கு குறைந்த செலவில் விமான சேவை இயக்குவதற்காக கடந்த 2005-ம் ஆண்டு ஏர் கேரளா என்ற விமான திட்டத்தை கேரள அரசு உருவாக்கியது.
இந்த திட்டத்தை தொடங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.