சென்னையில் இன்று முதல் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்களும், தொல்லைகளும் இருந்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக நாய்கள் கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கணக்கெடுக்கும் பணியில் நாய்களின் இனம், தன்மை, நோய் பாதிப்பு உள்ளிட்ட தகவல்களை WVS என்ற செயலியில் பதிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 20 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த கணக்கெடுக்கும் பணிகளில் மாணவர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் குழுக்களாக ஈடுபட்டுள்ளனர்.