மைசூரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஆதாயமடைந்ததாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 9 பேர் மீது விஜயநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மைசூரு நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி தனக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்து, நகரின் மைய பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலத்தைக் கையகப்படுத்தியதாக தெரிகிறது.
இதற்கு பார்வதியின் சகோதரர் உள்ளிட்ட சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 9 பேர் மீது விஜயநகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.