இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நெருக்கமான நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தொழிலதிபர்களை மிரட்டி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகவும், இதில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு ஆடம்பர பொருட்கள் பரிசளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.