உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஜோஷிமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வட இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால், பித்தோராகர் பகுதியில் உள்ள சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால், சாமோலி நகரம் மீண்டும் பாதிப்படைந்துள்ளது.
நிலச்சரிவுகளால் மூடப்பட்ட சாலைகளில், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.