டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்த்தார் சிங் தன்வர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, மூத்த அமைச்சர் அதிஷி கட்சி விவகாரங்களை நிர்வகித்து வருகிறார். அவர் மீதான அதிருப்தி காரணமாக கர்த்தார் சிங் தன்வர் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் ராஜ்குமார் ஆனந்த் தனது குடும்பத்தினருடன் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரை பாஜக தேசிய செயலர் அருண் சிங், டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் வரவேற்றனர்.