தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள், சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதில் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் போதாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.