மீன்களுக்கு போதிய விலை வழங்கப்படாததைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.