இலங்கை தலைநகர் கொழும்புவில், சினிமா பாணியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
அத்துருகிரி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் . பிரபல பாடகி கே. சுஜீவா உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பணம் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவிடம் உள்ளது.
அந்த பணத்தை தருமாறு கஞ்சிபானி இம்ரான் என்பவர் பலத்தடை கேட்ட நிலையில் அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.