லடாக்கில் 18 ஆயிரத்து 300 அடி உயரத்தில் சிக்கிய மூன்று ராணுவ வீரர்களின் உடல் 9 மாதங்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் குன் மலைப் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நான்கு ராணுவ வீரர்கள் பனிச் சறுக்கில் சிக்கி உயிரிழந்தனர்.
இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 3 பேரிடன் சடலம் கிடைக்கவில்லை. 9 மாதங்களான நிலையில், மலையேற்ற வீரர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டு, புதையுண்ட 3 ராணுவ வீரர்களின் உடலை மீட்டுள்ளனர்.