பாலம் கட்டுமானப் பணியை துரிதப்படுத்துமாறு ஐஏஎஸ் அதிகாரியிடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் திகா மற்றும் திதர்கஞ்ச் இடையே கங்கை ஆற்றில் 21 கிலோமீட்டர் தூரம் பாலம் கட்டப்படுகிறது.
இதற்கு ஜே.பி. கங்கா பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியைத் திறந்துவைத்த மாநில முதல்வர் நிதிஷ் குமார், பாலம் கட்டுமானப் பணி மந்தமாக நடைபெறுவதாக கவலை தெரிவித்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியிடம், அவரது காலில் வேண்டுமானாலும் விழுவதாகவும், எப்படியாவது பணியைத் துரிதமாக முடிக்குமாறும் நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.