மும்பையில் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில், சிவசேனா பிரமுகர் மகனை வரும் 16-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த ராஜேஷ் ஷா மகன் மிகிர் ஷா சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை போலீஸார் கைது செய்து சிவ்ரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மிகிர் ஷாவை வரும் 16-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து உத்தரவிட்டார்.